என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தகராறில் ஈடுபட்ட சிறுவனை கைது செய்த போலீசார்
    X

    தகராறில் ஈடுபட்ட சிறுவனை கைது செய்த போலீசார்

    • கரூரில் வீட்டு உரிமையாளரிடம் வாடகை தொடர்பாக தகராறில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்
    • கைது செய்யப்பட்ட சிறுவன் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே ஓ.கே.ஆர். தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (56). இவருக்கு சொந்தமான வீடு மாணிக்க நகரில் உள்ளது. அங்குள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் மூர்த்தி தனக்கு சொந்தமான மாணிக்க நகரில் உள்ள வீட்டிற்கு சென்ற போது அங்கு ஏற்கனவே வாடகை கொடுக்காத 17 வயது சிறுவன் மூர்த்தியிடம் வாடகை கேட்க, சிறுவன் வாடகை கொடுக்க முடியாது என தகாத வார்த்தைகளால் மூர்த்தியை திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மூர்த்தி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் அரசினர் கூர் நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

    Next Story
    ×