search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் அடிபட்டவர் சிகிக்சை பலனின்றி சாவு
    X

    ரெயிலில் அடிபட்டவர் சிகிக்சை பலனின்றி சாவு

    • ரெயிலில் அடிபட்டவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், புகலூர் ஹோம் சிக்னல் அருகே உள்ள ரெயில்பாதையில், சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், அவ்வழியாக சென்ற ரெயிலில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த ரெயில்நிலை அதிகாரி சீனிவாசன், கரூர் ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு வேலாயுதம்பாளையம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×