என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தம்பதியை தாக்கிய கொத்தனார் கைது
- தம்பதியை தாக்கிய கொத்தனார் கைது செய்யபட்டார்
- மேலும் தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் குளித்தலை அருகே உள்ள பங்களாபுதூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மலர்க்கொடி (வயது 45). இவர் கடந்த 5-ந்தேதி தனது வீட்டில் கணவர் மற்றும் உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு திருச்சாப்பூர் பகுதியை சேர்ந்த கொத்தனாரான திலீப் என்பவர் 3 பேருடன் வந்து உங்களது மகன் அரவிந்த் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு மலர்க்கொடி திருச்சாப்பூர் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 4 பேரும் சேர்ந்து மலர்க்கொடி, செல்வம், மலர்க் கொடியின் தங்கை ஜெயந்தி, உறவினர் தங்கம் ஆகிய 4 பேரையும் தகாத வார்த்தையால் திட்டி தாக்கி உள்ளனர்.
பின்னர் செல்வத்தை அரிவாளால் வெட்டி ரத்த காயம் ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயம் அடைந்த செல்வம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மலர்க்கொடி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் திலீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்