என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணராயபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
    X

    கிருஷ்ணராயபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

    • கிருஷ்ணராயபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது
    • டாக்டர் பார்த்திபன் மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட பிச்சம்பட்டி கிராமத்தில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தற்போது கோடைமழை பெய்து வருவதால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. டாக்டர் பார்த்திபன் மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார். முகாமில் சளி, காய்ச்சல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இப்பணியில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    Next Story
    ×