search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் மின்னணு தேசிய சந்தையில் ரூ.4.25 லட்சத்துக்கு விற்பனை
    X

    கரூர் மின்னணு தேசிய சந்தையில் ரூ.4.25 லட்சத்துக்கு விற்பனை

    • கரூர் மின்னணு தேசிய சந்தையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ரூ.4.25 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றுள்ளது
    • 2 ஆயிரத்து 533 கிலோ தேங்காய்கள் விற்பனை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்படி இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 2 ஆயிரத்து 533 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.25.19 -க்கும், குறைந்தபட்சமாக ரூ15.10- க்கும், சராசரியாக ரூ.23.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 59 ஆயிரத்து 621- க்கு ஏலம் நடைபெற்றது.

    இதே போல ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 675 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 85.09- க்கும் குறைந்தபட்சமாக ரூ 53.39- க்கும், சராசரியாக ரூ 82.89- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 980- க்கு ஏலம் நடைபெற்றது.

    Next Story
    ×