என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிலக்கடலை ரூ.39 ஆயிரத்திற்கு விற்பனை
- 5 குவிண்டால் நிலக்கடலை ரூ.39 ஆயிரத்திற்கு விற்பனை
- அரசு வேளாண் விற்பனை கூடத்தில் விற்பனை செய்த விவசாயிகள் மகிழ்ச்சி
வேலாயுதம்பாளையம்,
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை, காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. கரூர் ஒன்றியம், க.பரமத்திஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 5.13 குவிண்டால் எடை கொண்ட 16-மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.76-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.20-க்கும், சராசரி விலையாக ரூ.76.76-க்கும் என ரூ.38ஆயிரத்து 786-க்கு விற்பனையானது.
Next Story






