search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
    X

    குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை

    • 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளதால் சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது
    • சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது

    கரூர்,

    வெள்ளியணை, வாழியாம்புதுாரில் குடிநீர் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த அப்புசாமி என்பவர், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது: வாழியாம்புதுாரில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. தற்போது குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளதால், அதன் உள்ளே இறங்கி துாய்மை பணி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×