குப்பைகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

குப்பைகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள
குப்பைகள் அகற்ற பொதுமக்கள்  கோரிக்கை
Published on

கரூர்:

கரூர், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மார்க்கெட் சாலை, சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இவற்றை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், குப்பைகள் நிறைந்த பகுதியில் செல்ல முடியவில்லை. மேலும், தினமும், குப்பைகள் தேங்கி வருவதால், அவை அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, தினமும் குப்பை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com