search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலுமிச்சை வரவு அதிகரிப்பால் விலை சரிவு
    X

    எலுமிச்சை வரவு அதிகரிப்பால் விலை சரிவு

    • கோடை மழை காரணமாக வரத்து அதிகரித்தது
    • கிலோ ரூ,120 என சரிந்தது

    கரூர்,

    கரூரில் கடந்த மார்ச் மற்றும் நடப்பு ஏப்ரல் மாத தொடக்கத்தில், எலுமிச்சம் பழம் ஒரு கிலோ 140 ரூபாய் வரை விற்றது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகரித்தது.இதையடுத்து, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ எலுமிச்சை பழம், 100 ரூபாய் முதல், 120 என சரிந்தது.இதுகுறித்து, வியாபாரிகள் சிலர் கூறியதாவது, எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ள நிலையில், கோடை மழை துவங்கியுள்ளது. இதனால், அவற்றின் பயன்பாடு குறைந்து விலையும் சரிவடைந்து வருகிறது என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×