என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழமையான இடிக்கப்பட உள்ள பள்ளி கட்டிடங்கள் ஆய்வு
- புகழுர் நகராட்சியில் பழமையான இடிக்கப்பட உள்ள பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது
- பழமையான இடிக்கப்பட உள்ள கட்டிடத்தை நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் ஆய்வு நடத்தினார்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட 8 நகராட்சி துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் கட்டிடங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதையும்,பழமையான, சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக பள்ளிகளுக்கு நேரடியாக சென்று புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கள ஆய்வு மேற்கொண்டார் . அப்போது பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களின் குறைகளை கேட்டறிந்தார். களஆய்வின் போது, நகராட்சி பொறியாளர் பூங்கொடி, பணி மேற்பார்வையாளர் ரவி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story






