என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தவிட்டுப்பாளையத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம்
Byமாலை மலர்27 April 2023 6:45 AM GMT
- தவிட்டுப்பாளையத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது
- அதிக வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களை, அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காந்தி நகர், கட்டிப்பாளையம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது. இதில் கிராம, சுகாதார செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர், வீடுகளுக்கு நேரடியாக சென்று வீட்டில் உள்ள பொதுமக்கள், முதியவர்கள், பாலுாட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப்பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார். அதிக வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களை, அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் தொற்று பரவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X