என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
- லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யபட்டார்
- அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரூர்,
பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கடைகளில் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள டீக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்த பசுபதிபாளையம் அருணாச்சல நகரை சேர்ந்த அசோக் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






