என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடனை திருப்பி கேட்டவருக்கு அடி, உதை
    X

    கடனை திருப்பி கேட்டவருக்கு அடி, உதை

    • கரூரில் கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல் நடந்துள்ளது
    • வழக்கு பதிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் சடையம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சுப்பிரமணி (55). இவர் அந்த பகுதியில் உள்ள ராமசாமி, சம்பூரணம், பிரகாஷ் ஆகியோருக்கு கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடனை சுப்பிரமணி திருப்பி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி, சம்பூரணம், பிரகாஷ் ஆகியோர் சுப்ரமணியை பார்த்து தகாத வார்த்தைகள் திட்டி அவரை தாக்கியுள்ளனர். இதில் சுப்பிரமணி படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த அவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து சுப்பிரமணி ராமசாமி, சம்பூர்ணம், பிரகாஷ் ஆகியோர் மீது வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×