என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கரூர் பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு அவசரகால மீட்பு நடவடிக்கை விழிப்புணர்வு

- கரூர் பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பில் செயல்விளக்கம் அளிக்கபட்டது
- கரூர் தீயணைப்பு மீட்பு பணித்துறை நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான குழுவி–னரால் இந்த விழிப்புணர்வு செய்து காண்பிக்கப்பட்டது
கரூர்:
கரூர் தீயணைப்பு மீட்பு பணித்துறை மற்றும் பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பாக பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியின் சாரண, சாரணியர் மற்றும் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் அவசர கால மீட்பு நடவடிக்கை செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பரணி பார்க் சாரணர் திடலில் தீயணைப்பு மீட்புப் பணித்துறை கரூர் மாவட்ட அலுவலர் ஜெகதீஸ் உத்தரவுப்படி கரூர் தீயணைப்பு மீட்பு பணித்துறை நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான குழுவி–னரால் இந்த விழிப்புணர்வு செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பரணி பார்க் சாரண, சாரணியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தீ தடுப்பு மற்றும் அவசர கால மீட்பு நடவடிக்கை விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கத்தை கரூர் தீயணைப்பு மீட்பு பணித்துறை குழுவிடமிருந்து கற்றுக் கொண்டனர். பரணி பார்க் கல்விக் குழும தாளாளரும், பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவருமான மோகன–ரங்கன், கரூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் செல்வக்குமார், பரணி பார்க் சாரணர் மாவட்ட துணை தலைவர்கள் பத்மாவதி மோகனரங்கன், சுபாஷினி, பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வ––ரும், தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணை–யருமான முனைவர் ராம–சுப்பிரமணியன், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
