என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல்துறை சார்பில் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை வளர்மதி அனைவரையும் வரவேற்றார். போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வேலாயுதம்பாளையம் ரவுண்டானா மற்றும் முக்கிய வீதிகளில் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. பேரணியில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×