search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் இன்று  3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
    X

    கரூரில் இன்று 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

    • தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்
    • இன்று(ஞாயிற்றுக்கிழமை)3வது நாளாக பத்மா,சுரேஷ்,சக்திவேல் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கரூர்

    தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அந்த வகையில் கரூரில் அமைச்சர் அந்த அமைச்சருக்கு தொடர்புடையதாக கருதப்படும் கரூர் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீடு, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம், மகாத்மா காந்தி சாலையில் உள்ள அவரது வீடு, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல் வீடு ஆகிய 4 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அதன் பின்னர் நேற்று மீண்டும் மேற்கண்ட 4 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. தொடர்ச்சியாக

    இன்று(ஞாயிற்றுக்கிழமை)3வது நாளாக பத்மா,சுரேஷ்,சக்திவேல் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.இந்த சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

    Next Story
    ×