என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செவந்திபாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு மருத்துவ முகாம்
    X

    செவந்திபாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு மருத்துவ முகாம்

    • செவந்திபாளையத்தில் கால்நடை விழிப்புணர்வு
    • கால்நடை விழிப்புணர்வு மருத்துவ முகாம்

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் செவந்திபாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சாந்தி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட கால்நடை துறை உதவி இயக்குநர் லில்லி அருள்குமாரி முன்னிலை வகித்தார்.

    கால்நடை மருத்துவர்கள் திருமுருகன், சிவானந்தம் ,சேகர்மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல்,நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல் மற்றும் சிகிச்சைப் பணிகளை மேற்க்கொண்டனர்.

    மேலும் மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து விழி்ப்புணர்வு ஏற்படுத்தினர். கால்நடை பராமரிப்பு குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு ஆலோசனை வழங்கினர்.சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டது. இதில் செவந்திபாளையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் பயன் பெற்றனர்.

    Next Story
    ×