என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
    X

    சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

    • வேலாயுதம்பாளையம் அருகே அண்ணா நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை
    • 5 மது பாட்டில்களை பறிமுதல்

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே அண்ணா நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மணி என்கிற மகாமுனி (வயது42) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×