என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனுநீதி நாள் முகாம்
- கரூர் மாவட்டம் வெள்ளப்பட்டியில் நாளை நடைபெறுகிறது
- கலெக்டர் பிரபுசங்கர் தகவல்
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வெள்ளப்பட்டி கிராமம், மஜ்ரா வேலாயுதப்பாளையம் கிராமத்தில் நாளை (26-ந்தேதி, புதன்கிழமை) பிற்பகல் சுமார் 3 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர். மேலும் மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பாக கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன. எனவே, வெள்ளப்பட்டி கிராமம், மஜ்ரா வேலாயுதப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மேற்படி மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Next Story