என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
    X

    வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

    • தவுட்டுப்பாளையம் அருகே பள்ள வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நன்செய்புகளூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    வேலாயுதம்பாளையம்,

    ஈரோடு மாவட்டம் காரணாம்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணை பகுதியில் இருந்து புகளூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்பட்ட தண்ணீர் ஊஞ்சலூர், கொடுமுடி ,ஆவுடையார் பாறை வழியாக வந்து கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், திருக்காடுதுறை ,பாலத்துறை, நன்செய் புகளூர் ,தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக புகளூர் வாய்க்கால் செல்கிறது.புகளூர் வாய்க்காலை தாய் வாய்க்கலாக கொண்டு பாலத்துறை அருகே பிரியும் பள்ளவாய்க்கால், செம்படாபாளையம் அருகே பிரியும் பாப்புலர் முதலியார் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால், நெரூர் வாய்க்கால் ஆகியவற்றில் புகளூர் வாய்க்காலில் இருந்து உபரி நீர் திருப்பி விடப்படுகிறது. இந்த 5 வாய்க்கால்கள் மூலம் வரும்தண்ணீரைக் கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுமார் 15ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை, வாழை, கரும்பு, நெல், வெற்றிலை, மரவள்ளி, கோரை உட்பட பல்வேறு பணப்பயிர்களை பயிரிடப்பட்டுள்ளனர்.பாலத்துறை அருகில் இருந்து பிரியும் பள்ள வாய்க்காலில் வரும் தண்ணீரின் மூலம் விவசாயிகள் பல்வேறு பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் புகளூர் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பள்ள வாய்க்கால் தலைப்பு முதல் பள்ள வாய்க்காலுக்குள் ஏராளமான செடி கொடிகள் முளைத்து வாய்க்காலையே மூடி உள்ளது. மோதுக்காடு முதல் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை உள்ள பள்ள வாய்க்காலுக்குள் ஏராளமான செடி கொடிகள் முளைத்து வாய்க்காலுக்குள் இருக்கும் தண்ணீர் தெரியாத வகையில் வாய்க்கால் மூடி உள்ளது. இதன் காரணமாக பள்ள வாய்க்காலில் செல்லும் தண்ணீர் கடைமடை வரை செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் குறைந்த தண்ணீரே வாய்க்காலுக்குள் செல்வதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ள வாய்க்கால் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது .இந்நிலையில் புகளூர் வாய்க்காலில் இருந்து பிரியும் பகுதியில் இருந்து பள்ள வாய்க்காலில் முளைத்துள்ள ஏராளமான செடி கொடிகளையும் அகற்றி பள்ள வாய்க்காலை தூர்வாரி தண்ணீர் கடைமடை வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நன்செய்புகளூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×