என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புஞ்சை தோட்டக்குறிச்சியில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் 2-வது நாளாக நள்ளிரவு வரை நீடித்த வருமானவரித்துறை சோதனை
- திடீரென 3 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்சியில் இருந்து வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
- . தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் கடந்த2006-2011 ஆம் ஆண்டில் தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் தொழில் அதிபர் சக்திவேல். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் காலை7.30 மணி அளவில் திடீரென 3 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்சியில் இருந்து வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய 3 மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 7 மணி வரை சுமார் 12 மணி நேரம் சோதனை நடைபெற்றது. அதன் பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வை முடித்து விட்டு புறப்பட்டனர்.
நள்ளிரவு 2 மணி அளவில் 3-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சக்திவேலின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர்.பகல் 11.30 மணியளவில் வெளியில் சென்ற அதிகாரிகள் பகல் 12.30 மணி அளவில் மீண்டும் சோதனை மற்றும் விசாரணை நடத்தினர் .
நேற்று நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்