என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏழூர் சாலையை புதுப்பிக்க கோரிக்கை
- ஏழூர் சாலையை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
- மோசமான நிலையில் சாலை இருப்பதால் புதுப்பித்து தர கோரிக்கை
கரூர்,
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் பகுதியிலிருந்து ஏழூர் பகுதிக்தான சாலை செல்கிறது. தாந்தோணிமலை பகுதியில் இருந்து ஏமூர்,புதூர், திருச்சி பைபாஸ் சாலை, மூலக்காட்டனூர், காந்தி கிராமம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினரும் இந்தவழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த சாலையில் குறிப் பிட்ட தூரம் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள், தனியார் பள்ளிகள் உள்ளன. வாகன போக்குவரத்து அதிகளவு நடைபெற்று வருகிறது. எனவே, ஏமூர் சாலையை புதுப்பித்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






