search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் பகுதியில் தொடர் மழை
    X

    கரூர் பகுதியில் தொடர் மழை

    • கரூர் பகுதியில் தொடர் மழை பெய்தது
    • இதனால், குளிர்ந்த காற்று வீசியதால் கோடை வெயிலில் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

    கரூர்:

    தமிழகத்தில் வெப்ப சலனம் குறைந்ததால் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. இதையடுத்து நேற்று 2-வது நாளாக கரூர் டவுன், தான்தோன்றிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், திருமா நிலையூர், செல்லாண்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    இதனால், குளிர்ந்த காற்று வீசியதால் கோடை வெயிலில் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு: கரூரில் 2 மி.மீ., க.பரமத்தியில் 1.8 மி.மீ., மாயனுாரில் 3 மி.மீ., பாலவிடுதியில் அதிகபட்சமாக 30.3 மி.மீ., மயிலம்பட்டியில் 3 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 3.38 மி.மீ., மழை பதிவானது.


    Next Story
    ×