search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீதிமன்ற வளாகத்தில் ரத்த தான முகாம்
    X

    நீதிமன்ற வளாகத்தில் ரத்த தான முகாம்

    • முதன்மை அமர்வு நீதிபதி தொடங்கி வைத்தார்
    • 62 பேர் ரத்ததானம் கொடுத்தனர்

    கரூர்,

    கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் ரத்த தான முகாமை, தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்பட 62 பேர் ரத்த தானம் செய்தனர். முகாமில், முதன்மை சார்பு நீதிபதி பாரதி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம், கூடுதல் சார்பு நீதிபதி மகேந்திரவர்மா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி, சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×