search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகளூர் தீயணைப்பு துறை சார்பில் - விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு
    X

    புகளூர் தீயணைப்பு துறை சார்பில் - விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு

    • தீபாவளி பண்டிகை யை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டிகை யை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு மாணவ ,மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்கள். அப்போது சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோ ர்கள் முன்னிலை யில் வெடிக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வா னங்கள் வெடிக்கும் போது காலணி அணிய வேண்டும். பட்டாசுகளை மைதா னங்கள் மற்றும் சமதளத்தில் வைத்து வெடிக்க வேண்டும்.

    பட்டாசு மற்றும் புஸ்வானங்கள் வெடிக்கும் போது அருகில் தண்ணீர் வாளி வைத்திருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது நீண்ட வத்திக்குச்சிகளை வைத்து பட்டாசுகளின் பக்கவாட்டில் சற்று தொலைவில் நின்று கொண்டு பற்றவைக்க வேண்டும். பட்டாசு மற்றும் புஸ்வா னங்கள் பயன்படுத்து ம் போது இறுக்கமான ஆடைகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.

    உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தெரி வித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேபோல் பட்டாசு வெடிப்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்ற து. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×