என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுவன் மீது தாக்குதல்
- கூப்பிட்ட குரலுக்கு வராததால் சிறுவன் தாக்கப்பட்டார்
- காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதி
கரூர்,
குளித்தலையை அடுத்த, பெருமாள் கவுண்டம்பட்டி காலனி, வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சரவணன் (வயது 15). இவர், கடந்த 21ம் தேதி, பழனி என்பவரது பெட்டிக்கடை அருகே விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது, திருச்சி மாவட்டம், எட்டரை பஞ்சாயத்து கோப்பு கிராமத்தை சேர்ந்த கோபி (வயது 28), சரவணனை அழைத்த போது, வராததால் சிறுவனை தாக்கினார். இதில் காயமடைந்த சரவணன், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, சரவணனின் தாய் சுதா அளித்த புகாரின்படி தோகை மலை போலீசார் வழக்குப்பதிந்து, கோபியை கைது செய்தனர்.
Next Story






