என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசகவுண்டனூர்  செம்மடை குளம் கரை உடைப்பு
    X

    அரசகவுண்டனூர் செம்மடை குளம் கரை உடைப்பு

    • விடிய விடிய பெய்த மழையால் அரசகவுண்டனூர் செம்மடை குளம் கரை உடைப்பு ஏற்பட்டது
    • கரையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான செம்பியநத்தம் ஊராட்சி அரச கவுண்டனூரில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில செம்மடை குளம் உள்ளது.

    இந்தக் குளத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பினால் தண்ணீர் வெளியே செல்வதற்கு மிக குறுகிய அளவில் கடைக்காவல் உள்ளது. இந்த குளம் மழைக்காலங்களில் நீர் நிரம்பி நின்றால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதற்கான நிலத்தடி நீர்மட்டம் மற்றும் கிணற்றுகளில் தண்ணீர் ஊற்று அதிக அளவில் இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருகின்றனர்.

    இந்நிலையில் இரவு அப்பகுதியில் கனமழை பெய்தது. கனமழையில் குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறும் வழி மிகவும் குறுகலாக உள்ள காரணத்தினால் உடைந்து தண்ணீர் அதிக அளவில் வீணாகி செல்கிறது. இதனால் செம்மடை குளத்தின் கரையை பலப்படுத்த வேண்டும்.உபரி நீர் வெளியேறும் கடைகால் பகுதியை சிமெண்ட் பூச்சு கொண்டு கட்ட வேண்டும். வெளியேறும் உபரி நீர் வீணாகாமல் அருகிலுள்ள வெல்லப்பாறை குளத்திற்கு செல்லுமாறு வழிவகை செய்ய வேண்டும் மற்றும் குளத்தில் உள்ள தண்ணீர் அதிக அளவில் வெளியேறும் முன் கரையை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×