என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகையிலை விற்ற முதியவர் கைது
- கரூரில் புகையிலை விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்
- ஏராளமான புகையிலை பறிமுதல்
கரூர் குளித்தலை அருகே உள்ள எழுநூற்றுமங்களம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் தனது பெட்டிக் கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்ற அப்ரோஸ் (வயது 68) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் கடையில் விற்பனைக்காக இருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






