search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
    X

    சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை

    • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    கரூர்:

    எர்ணாகுளம்-காரைக்கால் செல்லும் ெரயிலில் மாலதி என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி பயணம் செய்தார். அப்போது அதே ெரயில் பெட்டியில் பயணித்த கணேஷ்குமார்(வயது 62) என்பவர் துாங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் (மாலதியின் மகள்) பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதுகுறித்து கரூர் ெரயில் நிலையத்தில் மாலதி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி நசீமாபானு போக்சோ சட்டத்தின் கீழ் கணேஷ்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் திறமையாக செயல்பட்ட திருச்சி இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரி, அவருக்கு உதவியாக இருந்த கரூர் இருப்புப்பாதை சப் இன்ஸ்பெக்டர் கேசவன், நீதிமன்றக்காவலர் பூபதி ஆகியோரை தமிழ்நாடு ெரயில்வே காவல் துறை துணை இயக்குனர் வனிதா, சென்னை மாவட்ட இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு), திருச்சி மாவட்ட இருப்புப்பாதை காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×