என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயில் குறுக்கே வந்ததால் விபத்து
    X

    மயில் குறுக்கே வந்ததால் விபத்து

    • மயில் குறுக்கே வந்ததால் டூவீலரிலிருந்து விழுந்த பெண் படுகாயம்
    • தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    கரூர்,

    குளித்தலை அடுத்த, மேட்டுதிருக்காம் புலியூர் தெற்கு தெருவை சேர்ந்த நாகராஜன் மனைவி பிருந்தாதேவி (வயது 30). இவரது உறவினர், சுக்காம்பட்டியை சேர்ந்த பிரதீப் (27), என்பவருடன், 'ஹீரோ ஸ்பிளண்டர்' டூவீலரில், பிருந்தாதேவி அமர்ந்துகொண்டு, இரும்பூதிப்பட்டி-தரகம்பட்டி நெடுஞ்சாலை, பஞ்சப்பட்டி-குமுளி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, குறுக்கே மயில் பறந்து வந்ததால், திடீரென பிரேக் பிடித்தபோது, டூவீலரில் அமர்ந்திருந்த பிருந்தாதேவி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அருகிலி ருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக, கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

    Next Story
    ×