search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளித்தலை அருகே 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு
    X

    குளித்தலை அருகே 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு

    • குளித்தலை அருகே 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு பிடிபட்டது
    • வீட்டினுள் இருந்த பாம்பை பத்து நிமிடத்தில் தீயணைப்புத் துறையினர் வந்து பிடித்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்

    குளித்தலை:

    குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பெரிய பாலம் சண்முகா நகரில் வசிக்கும் சாந்தி என்பவரது வீட்டினுள் நல்ல பாம்பு சென்று விட்டது. வீட்டில் இருந்தவர்கள் பாம்பை கண்டதும் வெளியில் அலறி அடித்து ஓடி வந்து முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளமுள்ள கொடிய விஷத்தன்மை உடைய நல்ல பாம்பை அவர்கள் வைத்திருந்த இடுக்கி இரும்பு கம்பால் லாபகமாக பிடித்தனர். தொடர்ந்து பாம்பை சாக்கு பையில் போட்டு கட்டிச் சென்று வனத்துறையில் விடுவதாக சென்றனர். வீட்டினுள் இருந்த பாம்பை பத்து நிமிடத்தில் தீயணைப்புத் துறையினர் வந்து பிடித்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தப் பாம்பு பல நாட்களாக அப்பகுதிகளில் திரிந்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×