என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்ற 5 பேர் கைது
    X

    மது விற்ற 5 பேர் கைது

    • கரூரில் மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 98 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கரூர்,

    மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் குளித்தலை சுங்ககேட் மற்றும் குப்பாச்சிப்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் குளித்தலை போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது, மது விற்ற அதே பகுதியை சேர்ந்த சுகதேவ் (வயது 27), குமார் (48), ராமகிருஷ்ணன் (40), சிவலிங்கம் (54), நீலமேகம் (33) ஆகிய 5 பேரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 98 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×