என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
- தோகைமலை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- 5 பேர் மீது வழக்கு பதிந்து ரொக்கப்பணம், 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
கரூர்,
தோகை மலை அருகே வடசேரி ஊராட்சி பகுதியில் பணம் வைத்து சீட்டு ஆடுவதாக தோகைமலை இன்ஸ் பெக்டர் ராஜ்குமாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அதன் பேரில் வடசேரி பகுதியியில் இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது வடசேரி சுடுகாடு பகுதியில், ஒரு கும்பல், பணம் வைத்து சீட்டு ஆடியது தெரிய வந்தது. அங்கு பணம் வைத்து சீட்டு ஆடிய வட சேரி தியாகராஜன், கேசவன், காவல்காரன்பட்டி வெள்ளிமலை, முத்துகிருஷ்ணன், நவலூர் வடிவேல், ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரொக்கப்பணம், 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
Next Story






