search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது
    X

    பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது

    வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே பாலத்துறை சுடுகாடு பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வேலாயுதம்பா ளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமை யிலான போலீசார் சம்பந்தப்பட்ட பாலத்துறை சுடுகா டு பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு சிலர் சேவல் சட்டையில் பணம் கட்டி சூதாடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது .

    அதன் அடிப்படை யில் அவர்களை சுற்றி வளைத்து விசாரணை நடத்தி னர். அப்போது சேவல் சண்டை சூதாட்ட த்தில் ஈடுபட்ட வர்கள் புன்னம் சத்திரம் அருகே பாண்டி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தெய்வே ந்திரன் (வயது 40), கரூர் திருவள்ளு வர் நகரைச் சேர்ந்த சபரிநாதன் (26) ,கரூர் திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த கவிய ரசன் (26),

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் அரசார் காட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (26),கரூர் வேலுச்சாமி புரம் பகுதி யைச் சேர்ந்த கண்ணன் ( 32 ) ஆகியோர் என்பது தெரிய வந்தது . 5 பேரையும் கைது செய்து சேவல் சண்டையில் ஈடுபட்ட சேவ ல்களை பறி முதல் செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×