search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் பாரில் பணம் தராமல் மிரட்டிய 3 பேர் கைது
    X

    டாஸ்மாக் பாரில் பணம் தராமல் மிரட்டிய 3 பேர் கைது

    • பணம் கேட்ட பார் உரிமையாளருக்கு பீர் பாட்டில் காட்டி மிரட்டல்
    • போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்துள்ளனர்

    கரூர்,

    குளித்தலை, சுங்ககேட் பகுதியில் திருச்சி நெடுஞ்சாலையில் கரூர் டாஸ்மாக் கடையுடன் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரை, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த, ஆனையடி கிராமத்தை சேர்ந்த பிரவீன்ராஜ் (வயது 26) என்பவர் நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக இவரது உறவினர்கள் அன்புகுமார், மணி ஆகியோர் பாரில் வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று மணத்தட்டையை சேர்ந்த யுவனேஸ்வரன் (வயது 27), அதே பகு தியை சேர்ந்த குமரவேல் (25), பாலாஜி, (28), ஆகிய மூவரும், பாரில் திண்பண் டங்களை சாப்பிட்டுவிட்டு, பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். அப்போது, அவர்களிடம் பணம் கேட்டதற்கு, பீர் பாட்டிலை காட்டி மிரட்டியுளனர். இது கு றித்து பிரவீன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவனேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×