என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்ற 2 பேர் கைது
    X

    மது விற்ற 2 பேர் கைது

    • கரூரில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் அரசு அனுமதி இன்றி மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு மதுபாட்டில்களை அதிக விலைக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்து கொண்டு இருந்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். அதேபோல் தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மதுபாட்டில்களை விற்பனை செய்த புஞ்சை தோட்டக்குறுச்சி பகுதியை சேர்ந்த சண்முகம்(55) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×