என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீரவணக்கம் செலுத்த வந்த 13 பேர் கைது
- க.பரமத்தியில் போலீஸ் அனுமதி பெறாமல்வீரவணக்கம் செலுத்த வந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்
- பொதுமக்கள் இடையூறு ஏற்படுத்தியதாக கூறி போலீசார் கைது செய்தனர்
கரூர்,
கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு கல்குவாரி உரிமையாளரால் கொலை செய்யப்பட்ட ஜெகநாதனின் நினைவு நாளையொட்டி சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் வீரவணக்கம் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் வீரவணக்கம் செலுத்துவதற்காக கோஷம் எழுப்பியபடி சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் குணசேகரன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள்பட 13 பேர் வந்தனர். அவர்களை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.
Next Story






