என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது, குட்கா விற்ற 10 பேர் கைது
- போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினர்
- மது பாட்டில்கள், குட்கா பறிமுதல்
கரூர்,
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா உள்ளிட்ட போலீசார், அரவக்குறிச்சி, வாங்கல், லாலாப்பேட்டை, பாலவிடுதி உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக கோபால கிருஷ்ணன் (வயது 50), பெரியசாமி (50), சேகர் (61), சோளியப்பன் (66), கோவிந்தராஜ் (73), பழனியப்பன் (62), கிருஷ்ணமூர்த்தி (50), மஞ்சுளா (46), தங்கதுரை (45) ஆகிய, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 117 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தென்னிலை போலீஸ் எஸ்.ஐ., தில்லைக் கரசி உள்ளிட்ட போலீசார், கடைவீதி பகுதி யில், ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள, புகையிலை, குட்கா பொருட்களை, பீடா கடையில் விற்றதாக மாரிமுத்து (வயது 85) என்பவரை, தென்னிலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.