search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருப்பூர் சுங்கச்சாவடியை பள்ளி வாகன ஓட்டுனர்கள் முற்றுகை
    X

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    கருப்பூர் சுங்கச்சாவடியை பள்ளி வாகன ஓட்டுனர்கள் முற்றுகை

    • சேலம்-ஓமலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பல்கலைக்கழகம் அருகில் சுங்கச்சாவடி உள்ளது.
    • பள்ளி களில் குழந்தைகளை ஏற்று செல்லும் வாகனங்க ளுக்கு (லோக்கல்) உள்ளூர் கட்டணம் ரூ.15. வசூலிக்கப்பட்டு வந்தது.

    கருப்பூர்:

    சேலம்-ஓமலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பல்கலைக்கழகம் அருகில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவ டியில் ஓமலூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேலம் மாநகர் பகுதியில் உள்ள பள்ளி களில் குழந்தைகளை ஏற்று செல்லும் வாகனங்க ளுக்கு (லோக்கல்) உள்ளூர் கட்டணம் ரூ.15. வசூலிக்கப்பட்டு வந்தது.

    இதில் பாஸ்ட் ட்ராக் மூலமாக வங்கி கணக்கில் இருந்து ரூ.60 ரூபாய் தானா கவே எடுத்துக் கொள்கிறது. உள்ளூர் வாகனங்கள் நாள் ஒன்றுக்கு 4. முறை ஓமலூர் சேலத்திற்கு மாணவர்களை அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.240 கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்த கட்டணத்தை குறைக்க கோரி சேலம் மேற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் சுசீந்திர குமார், தலைமையில் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ரகு நந்தகுமார் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் சுங்கச்சாவடி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் டோல் பிளாசா மேலாளர் சாம்பலை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் நிறுவன உரிமையாளரிடம் தெரிவித்து கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×