search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கர்நாடக பஸ்-ஜீப் மோதல்
    X

    கோவையில் கர்நாடக பஸ்-ஜீப் மோதல்

    • வேனில் வந்த 14 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
    • இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    கோவை,

    கர்நாடக மாநிலத்தில் இருந்து 20 பயணிகள் வேனில் மருதமலை, பேரூருக்கு சுற்றுலா வந்தனர். அப்போது கே. ஜி மில் சாலை அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஜீப் மீது மோதியது. இதில் வேனில் வந்த 14 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    ஜீப்பில் வந்த மில் தொழிலாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இந்த விபத்தினால் கோவை வடவள்ளி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    Next Story
    ×