search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரியில் 350 கிராம் கஞ்சாவுடன் வாலிபர் கைது
    X

    கோப்பு படம் 

    வடசேரியில் 350 கிராம் கஞ்சாவுடன் வாலிபர் கைது

    • அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகி றார்கள். போலீசாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக கஞ்சா புழக்கம் தற்போது குறைந்துள்ளது.

    இந்த நிலையில் வடசேரி போலீசார் வடசேரி பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்த னர். அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்த 350 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×