search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக மரபு வார சிறப்பு நடுகற்கள் கண்காட்சி
    X

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக மரபு வார சிறப்பு நடுகற்கள் கண்காட்சி

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளி த்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக மரபு வார சிறப்பு நடுகற்கள் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உலக மரபு வாரமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சங்ககாலத்தில் இருந்தே வீரச்செயல் செய்தவர்க ளுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால் சங்க காலத்தில் எடுக்கப்பட்ட பெரும்பா ன்மையான நடுகற்கள் அழிந்துபோயின. கி.பி 6-ம் நூற்றாண்டு தொடங்கி 9-ம் நூற்றாண்டு வரை பல்லவர், வாணர் கால நடுகற்கள் நமக்கு கிடைக்கி ன்றன. தர்மபுரி, செங்கம் பகுதிகளில் பல்லவர்கள் கீழ் ஆட்சி செய்த வா ணர்க ளின் நடு கற்கள் அதி கம் கிடை க்கி ன்றன.

    9-ம் நூற்றா ண்டுக்கு பின் சோழர்கள், வாண கோவ ரையர்கள், குறுநில நாடுகளில் நடுக ற்கள் கிடைக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் வைக்க ப்பட்ட பெரும்பா ன்மையான நடுகற்களில் கல்வெட்டுகள் காணப்ப டுகின்றன. மன்னரின் பெயர், ஆட்சி ஆண்டு, வீரச்செயல் செய்த வீரனின் பெயர், தந்தையின் பெயர், ஊர், எதற்காக இற ந்தான் போன்ற விவரங்கள் கல்வெ ட்டில் பொறிக்கப்ப ட்டன.

    தொறுபூசல் எனப்படும் கால்நடைகளை கவர்தல், மீட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. 15-ம் நூற்றாண்டுக்குப்பின் நடுகல்லில் கல்வெட்டு வெட்டும் வழக்கம் குறைந்து போனது. இன்றும் கூட சில பிரிவுகளில் இறப்பின்போது கல்லெடுக்கும் வழக்கம் உள்ளது.

    நடுகல்லில் பல வகைகள் உள்ளது. நினைவுக்கல், வீரக்கல், நவகண்டம், அரிக ண்டம், சதிகல், புலிகுத்திப்ப ட்டான் கல், ஆநிரைக்கல் என அமைக்கப்பட்டது. இது மிக பழமையான கி.மு. 4-ம் நூற்றாண்டை சேர்ந்த தொல்காப்பியர் இலக்கிய விதிப்படி எழுதப்பட்ட முதல் நடுதல் புள்ளிமான் கோம்பை (தேனி) தாதா பட்டி (திண்டுக்கல்) உள்ளி ட்ட 69 நடுகற்களின் புகைப்ப டங்கள் காட்சி ப்படுத்தப்ப ட்டுள்ளன. இந்த கண்கா ட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறி ப்பிட்ட என்னை கவர்ந்த கல்வெட்டு என்கிற கல்வெட்டின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது.இந்த புகைப்பட கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளி த்தனர்.

    Next Story
    ×