search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி வாராந்திர ரெயில் இரணியல் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் - பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    வேளாங்கண்ணி வாராந்திர ரெயில் இரணியல் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் - பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • காலை 4 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
    • கல்குளம் தாலுகா அதிக மக்கள் தொகை கொண்ட தாலுகா ஆகும்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், தெற்கு ரெயில்வே அதிகாரிக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதா வது:-

    திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வாராந்திர சிறப்பு ரெயில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 23, 30-ந் தேதி மற்றும் செப்டம்பர் 6-ந் தேதி (புதன்கிழமை)களில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் குழித்துறை, நாகர்கோவில் டவுண், திருநெல்வேலி, மதுரை ,திருச்சி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வியாழக்கிழமை காலை 4 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறு மார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து வியாழக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி, மதுரை, நாகர்கோவில் டவுன், குழித்துறை வழியாக திருவனந்தபுரத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 7:30 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் சட்டமன்ற தொகுதி மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இரணியல் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இரணியல் ெரயில் நிலையம் கல்குளம் தாலுகாவில் அமைந்துள்ளது. மாவட்டத்திலுள்ள மற்ற தாலுகாக்களை விடவும் கல்குளம் தாலுகா அதிக மக்கள் தொகை கொண்ட தாலுகா ஆகும். இந்த தாலுகாவை சார்ந்த மக்கள் அனைவரும் இரணியல் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயிலுக்கு இரணியலில் நிறுத்தம் கொடுக்காமல் இயக்குவது இந்த தாலுகா மக்களை புறக்கணிக்கும் செயலாகும். ஆகவே வேளாங்கண்ணி சிறப்பு ரெயில்கள், இரணியல் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×