search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புல்லுவிளை பெருமாள் சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா
    X

    புல்லுவிளை பெருமாள் சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா

    • நாளை மறுநாள் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது
    • 9 மணிக்கு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நிகழ்ச்சியும், மாபெரும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    என். ஜி. ஓ. காலனி :

    குமரி மாவட்டம் பறக்கை அருகே உள்ள புல்லுவிளை யில் பெருமாள் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு அந்தப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இந்தக் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 6:30 மணிக்கு சிறப்பு பூஜையும், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணிக்கு பஜனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜையும், 7.30 மணிக்கு சாமி, வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வருதல் ஆகியவையும் நடக்கிறது.

    விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு முகிலன்விளை ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் பஜனை குழுவினரின் பக்தி இன்னிசை பாடல்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு கடல் நீராட செல்லுதல் நிகழ்ச்சியும், 8 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் 21 வகை காய்கறிகள் படைத்து பூஜையும், பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், பகல் 1 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. ெதாடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், 7 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவராக ஆஞ்சநேயர் வாகனத்தில் திருக்கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலும், 8:00 மணிக்கு சமயவகுப்பு மாணவ, மாணவி யரின் கலை நிகழ்ச்சி களும் நடை பெறுகிறது.

    விழாவின் 8-ம் நாளான நாளை காலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜையும், 7 மணிக்கு பக்தர்கள் சிங்காரி மேளதா ளத்துடன் சொக்கப்பனை வெட்ட செல்லுதல் நிகழ்ச்சியும், பகல் 11 மணிக்கு சொக்கப்பனை நாட்டுதல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு திருக்கார்த்திகை சிறப்பு பூஜையும், 1 மணிக்கு மகா அன்னதானமும், மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் போட்டியும், இரவு 8 மணிக்கு ராஜமேளமும், 9 மணிக்கு சாஸ்தா கதை வில்லிசையும், 11 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜையும், 11.30 மணிக்கு பெருமாள் சுவாமி கதை வில்லிசையும், நள்ளிரவு 1 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு அலங்கார தீபாரா தனையும் நடைபெறுகிறது.

    9-ம் திருநாளான நாளை மறுநாள் (27-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவராக ஆஞ்சநேயர் வாகனத்தில் பக்தர்கள் புடை சூழ மேளதாளத்துடன் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், 4.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும், 5:30 மணிக்கு வான வேடிக்கையும், 6.30 மணிக்கு சிறப்பு பூஜையும், 8 மணிக்கு ராஜ மேளமும், 9 மணிக்கு வில்லிசையும், பகல் 1 மணிக்கு பெருமாள் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அலங்கார தீபாராதணைகளும், மாலை 3 மணிக்கு வண்ண கோலப் போட்டியும், பிற்பகல் 3:30 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவரராக சிங்காரி மேளதாளத்துடன் பக்தர்கள் புடை சூழ வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அலங்கார தீபாராதனையும், 8:30 மணிக்கு சோமாண்டி கதை வில்லிசையும் நடைபெறு கிறது.

    விழாவின் 10-ம் நாளான 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வில்லிசையும், நண்பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவரராக கருடர் வாகனத்தில் திருக்கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும், 7:30 மணிக்கு சிறப்பு பூஜையும், 8.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலும், 9 மணிக்கு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மாபெரும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருக்கார்த்திகை திரு விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் சுரேஷ், செயலாளர் அய்யப்பன், துணைச் செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் பாஸ்கர் மற்றும் ஊர் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×