search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் கன்னியர் மடத்தில் ரூ.45 ஆயிரம் திருட்டு
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவிலில் கன்னியர் மடத்தில் ரூ.45 ஆயிரம் திருட்டு

    • சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய கொள்ளையன் உருவம்
    • அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வட்ட கரை ஆர்.சி. சர்ச் ரோட்டில் கன்னியர்மடம் உள்ளது.இங்கு கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ளனர்.

    நேற்று காலை கன்னியர் மடத்திலிருந்து கன்னியாஸ்திரிகள் ஆலயத் திற்கு சென்றனர். பின்னர் கன்னியர் மடத்திற்கு வந்த போது அங்கிருந்த ரூ.45 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் பணத்தை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.இதையடுத்து ஆசாரிப்பள் ளம் போலீசில் புகார் செய்த னர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்த னர்.

    அப்போது கொள்ளை யன் ஒருவன் கன்னியாஸ்திரிகள் வெளியே செல்வதை நோட்டமிட்டு கன்னியர் மடத்துக்குள் புகுந்து பணத்தை எடுத்துச் செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாஸ்திரிகள் வெளியே செல்வதை நோட்டமிட்டு வாலிபர் கைவரிசை காட்டியிருப்ப தால் கொள்ளையில் ஈடுபட் டது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபராக இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×