search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடக்கு தாமரை குளத்தில் ஓட்டல்-பலசரக்கு கடையில் திருட்டு
    X

    வடக்கு தாமரை குளத்தில் ஓட்டல்-பலசரக்கு கடையில் திருட்டு

    • தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடு பட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை
    • இந்த 2 திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரு சிறுவன்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வடக்கு தாமரை குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை (வயது 42). இவர் பாறை குளத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு நீலகண்ட பிள்ளை ஓட்டலை அடைத்துச் சென்றார். மறு நாள் காலை அவர் வந்த போது ஓட்டலின் பின்பக்க கதவு திறந்து கிடந்து உள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது அங்கு உண்டியலில் இருந்த ரூ.600 திருட்டுப் போயி ருந்தது தெரியவந்தது. இது குறித்து தென்தாமரை குளம் போலீசில் நீலகண்ட பிள்ளை புகார் அளித்தார்.

    இதேபோல் வடக்கு தாமரை குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜப்பன் (63). பாறை குளத்தில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.இவர் சம்பவத்தன்று இரவு கடையை அடைத்து விட்டு அடுத்த நாள் காலை கடையை திறக்க வரும் பொழுது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    கடைக்குள் உள்ளே சென்று பார்த்த போது மேஜை டிராயரில் இருந்த ரூ. 5 ஆயிரம் மற்றும் 12 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் திருட்டுப் போயிருந்தது.

    இது குறித்து அவரும் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடு பட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தியதில் இந்த 2 திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரு சிறுவன் என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×