என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மனைவியை கொன்ற வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
- தினமும் பலருடன் செல்போனில் பேசியதால் கழுத்தை நெரித்து கொன்றேன்
- ஏளனமாக பேசி கிண்டல் செய்வார்
நாகர்கோவில்:
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி பெனிஸ்டர் (வயது 30). இவரது மனைவி பத்மா (30).
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை வீட்டில் பத்மா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து பத்மாவின் தந்தை வடசேரி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீ சார் பத்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பத்மா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர் பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் பத்மாவின் கணவர் ஆண்டனி பெனிஸ்டர் வடசேரி போலீசில் சரண் அடைந்தார். மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற தாக கூறினார். போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆண்டனி பெனிஸ்டரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆண்டனி பெனிஸ்டர் கூறியதாவது:-
நானும் பத்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். எங்களுக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரண மாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். இதையடுத்து கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.இருவரும் விவாகரத்து பெற்ற பிறகு பிரிந்து செல்லலாம் அதுவரை ஒரே வீட்டில் வசிக்கலாம் என்று கூறி ஒரே வீட்டில் வசித்து வந்தோம் .
இந்தநிலையில் நேற்று காலை எனது மகனும் மகளும் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். வீட்டில் இருந்த எனது மனைவி பத்மா தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். ஏற்கனவே அவர் நடத்தை யில் எனக்கு சந்தேகம் இருந்ததால் இது தொடர்பாக அவரிடம் கேட்டேன். அப்போது அவர் நமக்கு தான் விவாகரத்து ஆகப் போகிறது, நான் யாருடன் பேசினால் உனக்கு என்ன என்று என்னிடம் கூறினார்.இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரது கழுத்தை நெரித்தேன். இதில் பத்மா மயங்கி விழுந்தார். பின்னர் அங்கிருந்து வெளியே சென்று விட்டேன். வீட்டிற்கு வந்த போதுதான் எனது மனைவி இறந்திருக்கும் தகவல் தெரிய வந்தது.உடனே நான் போலீசில் சரணடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஆண்டனி பெனிஸ்டரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்