search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலக்குளம் பி.எஸ். நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
    X

    தலக்குளம் பி.எஸ். நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    • மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
    • பட்டமளிப்பு விழா, நர்சிங் பள்ளி சில்வர் ஜூப்லி விழா, கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா

    கன்னியாகுமரி :

    தலக்குளம் பி.எஸ்.நர்சிங் கல்லூரி 6-வது பட்டமளிப்பு விழா, நர்சிங் பள்ளி சில்வர் ஜூப்லி விழா, கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி கலை அரங்கில் நடந்தது. விழாவுக்கு கல்லூரி சேர்மன் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அமுது முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜோஸ் பின் சுதா வரவேற்று பேசினார். தலக்குளம் பஞ்சாயத்து தலைவர் லெஷ்மி குமார் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் மூளை நரம்பியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பழனியாண்டி, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சரோஜினி, குழந்தைகள் நல நிபுணர் மருத்துவர் சுனிதா, மருத்துவர் ஜீலியா, பி.எஸ்.ஆஸ்பத்திரி நிர்வாக அதிகாரி குற்றாலம்பிள்ளை, மக்கள் தொடர்பு அதிகாரி நாராயண பிள்ளை, எஸ்.பி.யின் தாயார், நர்சிங் கண்காணிப் பாளர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி ஊழி யர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பழனியாண்டி நன்றி கூறினார்.

    Next Story
    ×