search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் ராணுவ வீரரின் உடலை பிணவறைக்கு அனுப்புவதில் ஊழியர்கள் அலட்சியம்
    X

    முன்னாள் ராணுவ வீரரின் உடலை பிணவறைக்கு அனுப்புவதில் ஊழியர்கள் அலட்சியம்

    • குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு
    • பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் மண லிக்கரை இலங்கம் பகுதியை சேர்ந்தவர் கேசவன் நாயர் (வயது 52). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று காலையில் ரத்த வாந்தி எடுத்ததால் உறவினர்கள் அவரை குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசேதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் உடலை உறவினர்கள் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். முன்னாள் ராணுவ வீரர் என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை வேண்டும் என டாக்டரிடம் கூறியுள்ளனர்.

    அதற்கு டாக்டர் போலீஸ் வந்தால் தான் எங்களால் உடலை பெற்று பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்ப முடியும் என கூறினார். இதனால் உறவினர்கள் கொற்றிகோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து போலீசார் வராததால் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது எங்கள் பகுதியில் நடக்காததால் நாங்கள் வரமுடியாது என குலசேகரம் போலீசார் தெரிவித்தனர். இப்படியாக இறந்த ராணுவ வீரர் உடல் புறநோயாளிகள் பகுதியில் திறந்த நிலையில் வெகு நேரமாக காத்திருந்தது.

    இதை அறிந்த முன்னாள் ராணுவ வீரர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கொற்றிகோடு போலீசார் வந்து உடலை பெற்று பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்று காலையில் இவரின் உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. கொற்றிகோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×