search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அஞ்சுகிராமம் அருகே  ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு
    X

    அஞ்சுகிராமம் அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு

    • 2 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
    • ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாடு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜா (வயது 63). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்.

    இவர், நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு மீன் வாங்குவதற்காக சென்றார். பின்னர் மீன்களை வாங்கி விட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    பால்குளம் அருகே வந்து கொண்டிருந்தபோது லீபுரம் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் சிங் (22), வட்டக்கோட்டை பகுதி யைச் சேர்ந்த பெலிக்ஸ் (27) ஆகிய இருவரும் பால்ராஜாவின் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.இருவரும் பால்ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த ராபர்ட் சிங் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பால்ராஜாவை வெட்டினார். பெலிக்ஸ் கத்தியால் குத்தினார். உடனே பால்ராஜா கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வந்த னர். இதையடுத்து இருவ ரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பால்ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பால்ராஜா அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ராபர்ட் சிங், பெலிக்ஸ் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி உள்பட 4 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    தலைமறைவான ராபர்ட் சிங் மீது கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தென்தா மரைகுளம் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. பெலிக்ஸ் மீது அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×